சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழும் கோவை மாநகராட்சி: தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் விமர்சனம்

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், உப்பிலிபாளையம் அருகே உள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு, சீரமைக்காமல் கிடக்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், மாநகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குறைகளை கூறினர். சாலைகள் அமைக்கப்படாமலும், சாலைகள் முழுவதும் புதர்கள் மண்டி கிடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.



இந்த ஆய்வுக்கு பின்னர் நா.கார்த்திக் கூறுகையில், "தி.மு.க., ஆட்சியின்போது, கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக ரூ. 377 கோடி ஒதுக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணி துவக்கபட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முழுமையாக செயல்படாமல் ஆமை வேகத்தில் இப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சியின் பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. கேபிள் பதிப்பதற்காக ஒரு கிலோ மீட்டருக்கு அனுமதி பெறப்பட்டு, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழி தோண்டியுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பகுதியில் அனைவரும் முழுமையான வரியை செலுத்தியபோதும் கூட இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. கோவையைச் சேர்ந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எவ்வித பணிகளும் செய்வதில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், கூட்டணி கட்சிகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். செயழிலந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்து வருகிறது. சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த மாநகராட்சியும் தற்போது முடங்கிக் கிடக்கிறது.

இந்த ஆய்வின்போது, ஜி.வி.ரெசிடென்சி நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் நரசிம்மன், செயலாளர் செல்வகுமார், வார்டு செயலாளர்கள் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...