ஸ்மார்ட் திட்டங்கள் குறித்து நாடாளு., நிலைக்குழுவிடம் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று விளக்கம்

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், கோவையும் இடம்பெற்றிருந்தது. மத்திய - மாநில அரசுகளின் நிதி மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிதிவண்டி பகிர்தல், ஸ்மார்ட் பள்ளிகள், நீர்நிலைகள் மேம்பாடு, சென்சார் போர்டுகள் போன்ற திட்டங்கள் கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம், மாதிரி சாலை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நகரின் பட்டியலில் கோவை ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சியின் அதிகாரிகள், தங்களின் செயல்பாடுகளை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று எடுத்துரைக்கின்றனர். கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அதிகாரிகளிடம் விளக்குகிறார். ராஜ்கோட், பூனே, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர். சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில், தமிழகத்தில் இருந்து கோவை மாநகராட்சி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...