பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது.
பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது.
ராஜஸ்தான், குஜராத் என உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர் பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கை கையாளும் நபர் தவறாக அந்த வீடியோ பதிவை பகிர்ந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டாலும், ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. கிரிக்கெட் நிர்வாக குழு டுவீட் நீக்கப்பட்டிருந்தாலும், டுவீட் ஸ்கிரீன் ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன.
ராஜஸ்தான், குஜராத் என உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர் பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கை கையாளும் நபர் தவறாக அந்த வீடியோ பதிவை பகிர்ந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டாலும், ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. கிரிக்கெட் நிர்வாக குழு டுவீட் நீக்கப்பட்டிருந்தாலும், டுவீட் ஸ்கிரீன் ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன.