ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி என்றும், குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்பதே நடிகர் ரஜினியின் அரசியல் கொள்கை என ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியுள்ளார்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி என்றும், குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்பதே நடிகர் ரஜினியின் அரசியல் கொள்கை என ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. இதற்கான நிர்வாகிகள் மாவட்டம், நகரம், வட்டம் அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை, புதுச்சேரிக்கு மட்டுமே நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வேண்டியுள்ளது. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர், மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்..?, தொடங்க இருக்கும் புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும்..? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சுதாகர், ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அவர்களிடம் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தனர். அடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் மாவட்ட அளவில் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.
கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் பேசியதாவது:- அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். அதை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. இதில், ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது, எனக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. இதற்கான நிர்வாகிகள் மாவட்டம், நகரம், வட்டம் அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை, புதுச்சேரிக்கு மட்டுமே நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வேண்டியுள்ளது. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர், மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்..?, தொடங்க இருக்கும் புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும்..? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சுதாகர், ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அவர்களிடம் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தனர். அடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் மாவட்ட அளவில் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.
கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் பேசியதாவது:- அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். அதை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. இதில், ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது, எனக் கூறினார்.