கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அக்குழுவைச் சேர்ந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர், கெயில் நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் மீண்டும் விவசாயிகள் நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினர்.

மேலும், தமிழகத்தில் ஒசூர் வழியாக வாளையாறு வரை கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியார்க்க எரிவாயு குழாய் பதிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இவற்றை வகை செய்யும் இந்திய டெலிகிராப் சட்டங்களை எதிர்த்து சட்ட எதிர்ப்பு மாநாட்டினை ஒசூரில் ஏப்ரல் 29 ம் தேதி நடத்த உள்ளோம் என்றனர்.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.