பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் குழுவிடம் மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் குழுவிடம் மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவலும் இன்று மதியம் 2.30 மணியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, அவர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 குழுக்களாக பிரிந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிர்மலா தேவி தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே, நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர்களிடமும் விசாரணை விரிவடைந்துள்ளது.

மறுபுறம், ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து கடந்த 18-ந் தேதி முதல் விசாரணையை நடத்தி வருகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள், மாணவிகளிடம் 3 நாட்களாக சந்தானம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, சென்னை சென்ற அவர், இன்று காலை மீண்டும் மதுரை வந்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் 2-ம் கட்ட விசாரணையை இன்று தொடங்கினார்.

அப்போது, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், நிர்மலா தேவி மீது புகார் தெரிவித்து சந்தானத்திடம் மனுக்களாக அளித்தனர். அந்த மனுக்களை மாணவிகளின் சார்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்துக்குமார், சந்தானத்திடம் வழங்கினார். மாணவிகள் மைனர் என்பதால், சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் சந்தானம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவும் சந்தானம் திட்டமிட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...