பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று மாலைக்குள் முழு தண்டனை விபரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கும் அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால், ஆசாராமிற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசத், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசாராமின் ஆசிரமங்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசாராமிற்கு அதிகபட்சம் தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. அதேசமயம், ஆசாராமின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என ஆசாராம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆசாராம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், சமூர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால், ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது வருகின்றனர். முன்னதாக, இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஆசாராமிற்கு சாதகமாக வர வேண்டும் என ஆமதாபாத் உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களில், ஆதரவாளர்கள் பலர் சிறப்பு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...