கோவை: கோவை மத்திய சிறையில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டுரைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் நங்கவள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அறையில் கை, கால், வயிற்று இடது பகுதி, கழுத்து ஆகிய உடல் பகுதிகளில் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். சென்னையில் தேர்வு எழுதிவிட்டு நேற்று சிறைக்கு திரும்பி வந்தபோது, கஞ்சா வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கபட்டது. இதனால், அச்சம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.