கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.
கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கோவை ப்ரூக்பில்ட் வணிக வளாகத்தில் 'எவ்ரி டிராப் கவுண்ட்ஸ்' (Every Drop Counts) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் பயன்பாடு குறித்து விளக்கினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திறந்த வெளி பகுதிகளை கட்டிடங்கள் கொண்டு நிரப்புவதால், வெள்ள சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க நமது முன்னோர்கள், தொட்டிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை நாம் கடைபிடிக்காமல், அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கோவை ப்ரூக்பில்ட் வணிக வளாகத்தில் 'எவ்ரி டிராப் கவுண்ட்ஸ்' (Every Drop Counts) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் பயன்பாடு குறித்து விளக்கினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திறந்த வெளி பகுதிகளை கட்டிடங்கள் கொண்டு நிரப்புவதால், வெள்ள சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க நமது முன்னோர்கள், தொட்டிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை நாம் கடைபிடிக்காமல், அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.
