சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றம்

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டம் அரக்கோணம் பகுதிக்குட்பட்ட ரயில்வே தண்டவாளம் மற்றும் சிக்னல் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் நாளை (ஏப்.,25) முதல் மே 5-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் இயங்கும், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்பிரஸ், பரணி எர்ணாகுளம் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ், டேராடூன் மதுரை எக்ஸ்பிரஸ், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சாலிமர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோர்பா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரூ - சென்னை மெயில், மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் ப்ளு மவுண்டைன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கோவை - சென்னை சென்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 5 மற்றும் 6-ம் தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...