கோவை: முன்பதிவற்ற ரயில்வே பயணச்சீட்டுக்கள் இன்று முதல் தமிழில் வழங்கத் தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
கோவை: முன்பதிவற்ற ரயில்வே பயணச்சீட்டுக்கள் இன்று முதல் தமிழில் வழங்கத் தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரயில் சீட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது. சோதனை ஓட்டமாக ஒருசில ரயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த வார இறுதியில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் வழங்கப்படும் ரயில் சீட்டுகளில் தமிழ் மொழியில் விவரம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக ரயில்பயணிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே தமிழகத்தின் சேலம், சென்னை சென்ட்ரல், திருச்சி மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் இன்று முதல் (ஏப்.,24) தமிழில் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.