நிர்மலா தேவி விவகாரம் : மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சம்மன்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் பேசத் தூண்டிய பேராசிரியர் முருகன் என்பவரையும் போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. 

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் தங்கியிருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் ஜெனிதா தங்கியிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...