பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் பேசத் தூண்டிய பேராசிரியர் முருகன் என்பவரையும் போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் தங்கியிருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் ஜெனிதா தங்கியிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் பேசத் தூண்டிய பேராசிரியர் முருகன் என்பவரையும் போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் தங்கியிருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் ஜெனிதா தங்கியிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.