கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :-
விவசாயிகளுக்கு இலாபகரமான விலை, தண்ணீர் கொடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக உருவாக்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். மேலும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு உள்ளது.

கர்நாடகா தேர்தல் முடிந்ததும், பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் தனக்கு உள்ளது, என்றார்.