நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக தோடர் இன மக்கள் பாரம்பரிய 'எம்ராய்டரி' (பூ வேலைப்பாடு) மேற்கொள்வதில் வல்லவர்கள்.

இவர்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடை 'பூத்துக்குளி' விழா காலங்களிலும், இறுதி சடங்குகளிலும் தோடரின மக்கள் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தான் பங்கேற்க வேண்டும். பருத்தியாலான இந்த வெண்ணிற ஆடையில் சிவப்பு மற்றும் கருப்பு நிற நூலால், உடலில் பச்சை குத்துவது போல அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுவதால் இதன் விலை அதிகம்.
இந்த பூ வேலைப்பாடுகளால் கவரப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த ஆடைகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். அதே நேரத்தில் இந்த ஆடை விலை அதிகமாக உள்ளதால் வர்த்தக ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பூ வேலைப்பாடுகள் அடங்கிய பிற பொருட்களைத் தயாரிக்க தொடங்கியுள்ளனர். தலையணை உறைகள், செல்போன் உறைகள், அலங்கார விரிப்புகள் என இவர்களது படைப்புகள் விரிவடைந்துள்ளன.

இந்நிலையில் இவர்களின் பாரம்பரிய பூ வேலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தோடர் பழங்குடியின பெண்கள் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ‘தோடர் எம்ராய்டரி’ க்கும் (பூ வேலைப்பாடு) புவியியல் குறியீடு கிடைத்துள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோடர் நலவாழ்வு சங்கம், கீ ஸ்டோன் நிறுவனம் ஆகியவை இணைந்து தோடர் இன பெண்களின் பாரம்பரிய பூ வேலைப்பாட்டிற்கு (எம்ராய்டரி) புவியியல் குறியீடு பெற சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கான முக்கிய நோக்கம் தோடர் இன பெண்களின் கலாச்சாரத்தை இன்றளவும் பிரதிபலிக்கும் பாரம்பரிய பூ வேலைப்பாட்டை புவியியல் குறியீடு மூலம் பாதுகாப்பதுடன் இந்த கலையை மேலும் வளர்ச்சி பெறவும் இந்த கலையை செய்து வரும் பெண்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்வதாகும்.
இந்த புவியியல் குறியீட்டைப் பெற்றதன் மூலம் உலகிலேயே நீலகிரியில் வசிக்கும் தோடர் இன பெண்கள் செய்து வரும் பூ வேலைப்பாடு உலகில் வேறெங்கும் தயாரிக்கப்படுவதில்லை என உறுதியளிக்க முடியும். இந்த அறிய வகை கலைக்கு உலகளவில் ஒரு வியாபார உக்தியாக வைத்து விற்பனையை அதிகரிப்பதுடன் இக்கலையை விரும்பும் வாடிக்கையாளர்கள் இதன் தனித்தன்மையை உணர்ந்து அதற்கு உரிய விலை தர வழி வகை செய்யும்.

குறிப்பாக தோடர் இன மக்கள் பாரம்பரிய 'எம்ராய்டரி' (பூ வேலைப்பாடு) மேற்கொள்வதில் வல்லவர்கள்.

இவர்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடை 'பூத்துக்குளி' விழா காலங்களிலும், இறுதி சடங்குகளிலும் தோடரின மக்கள் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தான் பங்கேற்க வேண்டும். பருத்தியாலான இந்த வெண்ணிற ஆடையில் சிவப்பு மற்றும் கருப்பு நிற நூலால், உடலில் பச்சை குத்துவது போல அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுவதால் இதன் விலை அதிகம்.
இந்த பூ வேலைப்பாடுகளால் கவரப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த ஆடைகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். அதே நேரத்தில் இந்த ஆடை விலை அதிகமாக உள்ளதால் வர்த்தக ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பூ வேலைப்பாடுகள் அடங்கிய பிற பொருட்களைத் தயாரிக்க தொடங்கியுள்ளனர். தலையணை உறைகள், செல்போன் உறைகள், அலங்கார விரிப்புகள் என இவர்களது படைப்புகள் விரிவடைந்துள்ளன.

இந்நிலையில் இவர்களின் பாரம்பரிய பூ வேலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தோடர் பழங்குடியின பெண்கள் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ‘தோடர் எம்ராய்டரி’ க்கும் (பூ வேலைப்பாடு) புவியியல் குறியீடு கிடைத்துள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோடர் நலவாழ்வு சங்கம், கீ ஸ்டோன் நிறுவனம் ஆகியவை இணைந்து தோடர் இன பெண்களின் பாரம்பரிய பூ வேலைப்பாட்டிற்கு (எம்ராய்டரி) புவியியல் குறியீடு பெற சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கான முக்கிய நோக்கம் தோடர் இன பெண்களின் கலாச்சாரத்தை இன்றளவும் பிரதிபலிக்கும் பாரம்பரிய பூ வேலைப்பாட்டை புவியியல் குறியீடு மூலம் பாதுகாப்பதுடன் இந்த கலையை மேலும் வளர்ச்சி பெறவும் இந்த கலையை செய்து வரும் பெண்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்வதாகும்.
இந்த புவியியல் குறியீட்டைப் பெற்றதன் மூலம் உலகிலேயே நீலகிரியில் வசிக்கும் தோடர் இன பெண்கள் செய்து வரும் பூ வேலைப்பாடு உலகில் வேறெங்கும் தயாரிக்கப்படுவதில்லை என உறுதியளிக்க முடியும். இந்த அறிய வகை கலைக்கு உலகளவில் ஒரு வியாபார உக்தியாக வைத்து விற்பனையை அதிகரிப்பதுடன் இக்கலையை விரும்பும் வாடிக்கையாளர்கள் இதன் தனித்தன்மையை உணர்ந்து அதற்கு உரிய விலை தர வழி வகை செய்யும்.
