கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் ரபீக் (53).
வழக்கில் இருந்து விடுதலையான இவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் செல்போனில் உரையாடுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் ரபீக்-ஐ தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை அவரை கரும்புக்கடை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், தான் 160 வாகனங்களை அடித்து உடைத்ததாக ரபீக் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் யாராவது ரபீக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரபீக் மீது ஏற்கனவே (போக்கிரி) சரித்திரப் பதிவேடு தொடங்கியிருப்பதும், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் ரபீக் (53).
வழக்கில் இருந்து விடுதலையான இவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் செல்போனில் உரையாடுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் ரபீக்-ஐ தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை அவரை கரும்புக்கடை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், தான் 160 வாகனங்களை அடித்து உடைத்ததாக ரபீக் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் யாராவது ரபீக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரபீக் மீது ஏற்கனவே (போக்கிரி) சரித்திரப் பதிவேடு தொடங்கியிருப்பதும், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.