நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தெப்பக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இதில், யானை கேம்ப்பாடி என்னும் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை கிடைத்து வந்தது. வனவிலங்குகள் அதிகமாக அச்சுறுத்தல் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ. 12,000-ம், பணி முடியாத நிலையில் இருக்கும் கழிப்பிடம் கட்ட, மேலும் ரூ. 5,000-ம் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்பணிகளை முடித்தனர்.
இந்நிலையில், வனத்துறை இங்கு கட்டிய கழிப்பிடங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது ;- வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள எங்கள் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் வனப்பகுதியில் செல்லாமல் இருக்க தனிநபர் கழிப்பிடம் கட்டியும், அதைப் பயன்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள கழிப்பிடங்களை வனத்துறையினர் அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

தெப்பக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இதில், யானை கேம்ப்பாடி என்னும் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை கிடைத்து வந்தது. வனவிலங்குகள் அதிகமாக அச்சுறுத்தல் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ. 12,000-ம், பணி முடியாத நிலையில் இருக்கும் கழிப்பிடம் கட்ட, மேலும் ரூ. 5,000-ம் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்பணிகளை முடித்தனர்.
இந்நிலையில், வனத்துறை இங்கு கட்டிய கழிப்பிடங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது ;- வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள எங்கள் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் வனப்பகுதியில் செல்லாமல் இருக்க தனிநபர் கழிப்பிடம் கட்டியும், அதைப் பயன்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள கழிப்பிடங்களை வனத்துறையினர் அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.