தனிநபர் கழிப்பறையை அகற்றுமாறு வனத்துறையினர் மிரட்டுவதாக ஆதிவாசி மக்கள் புகார் மனு

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தெப்பக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இதில், யானை கேம்ப்பாடி என்னும் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை கிடைத்து வந்தது. வனவிலங்குகள் அதிகமாக அச்சுறுத்தல் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ. 12,000-ம், பணி முடியாத நிலையில் இருக்கும் கழிப்பிடம் கட்ட, மேலும் ரூ. 5,000-ம் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்பணிகளை முடித்தனர்.

இந்நிலையில், வனத்துறை இங்கு கட்டிய கழிப்பிடங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது ;- வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள எங்கள் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் வனப்பகுதியில் செல்லாமல் இருக்க தனிநபர் கழிப்பிடம் கட்டியும், அதைப் பயன்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள கழிப்பிடங்களை வனத்துறையினர் அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...