அகில இந்திய தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு வழங்கும் தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெறும் பொருட்டு, அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) பெற்றவர்கள், இதே தொழிற்பிரிவில் தனி நபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழில் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்சம் அனுபவம் பெற்றவர்கள், மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால், தனி விண்ணப்பதாரராக இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

கோவை, அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஒசூர், தாராபுரம், மேட்டூர் அணை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்/ அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குநர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பிற விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...