பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் : கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியின் செல்போன் உரையாடலால் பரபரப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர் ரபீக். 52 வயதான இவர், பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த கார் வியாபாரியான பிரகாஷ் ஒருவரிடம் தொழில் நிமித்தமாக ரபீக் பேசும் ஆடியோ ஓன்று வெளியாகி உள்ளது. அதில், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுவது போல பதிவாகியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் மூலம் வேகமாகப் பரவி வருகின்றது.

மேலும், அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது :- கொம்பு முளைத்தவன் வந்தாலும், என்னை ஒன்றும் பண்ண முடியாது. நாங்கள் "பிரதமர் மோடியையே கொலை செய்ய வேண்டும்" என்று முடிவு செய்துள்ளோம். நான் அத்வானிக்கு குண்டு வைத்தவன். 160 வண்டி உடைத்த வழக்குகள் உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம், தடா போன்ற எல்லா வழக்குகளையும் பார்த்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.

இந்த வாட்ஸ் அப் ஆடியோ குறித்து கோவை மாநகர போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலிசார் ரபீக்கை தேடிய போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா நேரடியாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், பிரதமர் குறித்து பேசியது தொடர்பாக கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரபீக்கிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ரபீக்கிற்கு சம்மன் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...