காவிரி விவகாரம்: மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. 

திருப்பூர் குமரன் சிலை முன்பு தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், நியுட்ரினோ திட்டத்தை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொது செயலாளர் சங்கிலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், "நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட விட்டால் இளைஞர்கள் ஒன்று திரண்டு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு அந்தத் திட்டத்தை தகர்ப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம்." எனக் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட பொது செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வம், திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...