நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சி தொடக்கம்

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு துறைகளில் பழமையான துறையாகக் கருதப்படும் நிலஅளவை பதிவேடு துறை கடந்த 1858-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தாண்டோடு, இத்துறை 160 ஆண்டுகளை கடந்துள்ளதை குறிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வருவாய் அலுவலர் ரவிசந்தரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



நிலஅளவை துறையின் பிதாமகன் என போற்றப்படும் வில்லியம் லாம்டன், 1802-ம் ஆண்டு சென்னையில் புனித தோமையர் மலையில் நில அளவையைத் துவங்கிய நாளான ஏப்ரல் 10-ம் நாள் தேசிய நில அளவை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் புகைபடங்கள் தற்போது உபயோகப்படுத்தும் முறை உள்ளிட்ட படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.



அன்றைய சென்னை மாகாணத்தை உள்ளடக்கி இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாகக் கொண்டு 1858-ம் ஆண்டு 18 நில அளவர்கள், 20 வரைவாளர்கள், 30 நிலஅளவை உதவியாளர்கள், 50 எழுத்தாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட நில அளவைத் துறை 160 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நில அளவைத் துறையின் ஆவணங்களை, தற்போது இணையதளம் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...