கோவை: ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தி இந்து உரிமை கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தி இந்து உரிமை கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறும் நாளான இன்று இந்து உரிமை கழகத்தினர் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மனுதாரர்கள் கூறுகையில், "கோவையில் தற்போது மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகவிட்டதாலும், வாகன பெருக்கத்தால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருவதாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல் வடிவம் பெறும் போது, விரிவாக்கத்திற்கு இடையூறாக சாலைகளில் அமைந்துள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அனைத்து மதத்தினரும் தாமாக முன்வந்து உதவ வேண்டும்." என்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறும் நாளான இன்று இந்து உரிமை கழகத்தினர் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மனுதாரர்கள் கூறுகையில், "கோவையில் தற்போது மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகவிட்டதாலும், வாகன பெருக்கத்தால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருவதாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல் வடிவம் பெறும் போது, விரிவாக்கத்திற்கு இடையூறாக சாலைகளில் அமைந்துள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அனைத்து மதத்தினரும் தாமாக முன்வந்து உதவ வேண்டும்." என்றனர்.