ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை - ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு

கோவை : ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை : ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்ட புதிய காவல் உதவி மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட இக்காவல் உதவி மையத்தை கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மொழி பிரச்சினை காரணமாக ஏற்படும் இடையூறுகளை களையும் விதமாகவும், உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டும் விதமாகவும் இந்த காவல் உதவி மையம் செயல்படும். இந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிப்புலமை உள்ளவர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இதற்கென தனியாக நியமிக்கப்பட்டு வெளி மாநில மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி புரிவார்கள். 

தற்போது, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள காவல் உதவி மையம் போல், விரைவில் பிற ரயில் நிலையங்களிலும் தொடங்கப்படும். ரயில்வேயில் தற்போது மூன்றில் ஒரு பங்கு பெண் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ரயில் பயணங்களின் போது பெண் பயணிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பயணத்தின் போது தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை வாய் மொழியாக புகார் தெரிவித்தால் கூட அதனை வழக்காகப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...