திருப்பூர் : திருப்பூரில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் அண்ணாதுரை. இவர் நேற்று காலை வழக்கம் போல செல்லம் நகர் பகுதிகளில் ரோந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே காலை வேளையில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குடி மகன்களை அவரவர் வீட்டிற்குச் செல்ல வலியுறுத்தினார்.
இதனால் அங்கிருந்த வாலிபர்கள் ஆத்திரமடைந்து காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு கை முறிவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்லம் நகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் , கருப்பையா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் அண்ணாதுரை. இவர் நேற்று காலை வழக்கம் போல செல்லம் நகர் பகுதிகளில் ரோந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே காலை வேளையில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குடி மகன்களை அவரவர் வீட்டிற்குச் செல்ல வலியுறுத்தினார்.
இதனால் அங்கிருந்த வாலிபர்கள் ஆத்திரமடைந்து காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு கை முறிவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்லம் நகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் , கருப்பையா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர்.