மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு வீட்டில் சேர்த்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அந்தோணி (40) என்ற ஒரு வாலிபர் கழுத்தில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்தார். இரும்பு கம்பிகள் கழுத்தில் காயங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 



தகவலின் பேரில் அங்கு சென்ற அந்த தன்னார்வ அமைப்பினர், அந்தோணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது வீடு புலியகுளம் பகுதில் இருப்பதும் தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின்னர் அந்தோணியை அழைத்துச் சென்ற ஈர நெஞ்சம் அறக்கட்டளை அவரது வீட்டில் ஒப்படைத்தனர். 



நீண்ட நாட்களுக்குப் பின் சகோதரரைக் கண்ட அந்தோணியின் தம்பி ஜோசப் தன்னார்வ அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...