கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று புவி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கோவையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புவியை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு இன்று துளசி செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துளசிச் செடிகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, புவி தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, புவிக்கும் தங்களுக்கும் இருக்கும் தொடர்பினை உணர்த்தும் வகையில் தன்னார்வலர்கள் தங்களது முகங்களில் சேற்றினை பூசிக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இன்று புவி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கோவையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புவியை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு இன்று துளசி செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துளசிச் செடிகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, புவி தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, புவிக்கும் தங்களுக்கும் இருக்கும் தொடர்பினை உணர்த்தும் வகையில் தன்னார்வலர்கள் தங்களது முகங்களில் சேற்றினை பூசிக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
