கோவையில் சேற்றை முகத்தில் பூசி புவி தினம் கொண்டாடிய தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்று புவி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கோவையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புவியை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு இன்று துளசி செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.



உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துளசிச் செடிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, புவி தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, புவிக்கும் தங்களுக்கும் இருக்கும் தொடர்பினை உணர்த்தும் வகையில் தன்னார்வலர்கள் தங்களது முகங்களில் சேற்றினை பூசிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...