நீலகிரி: உதகையில் நடைபெற இருக்கும் 122-வது மலர் கண்காட்சிக்காக, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
நீலகிரி: உதகையில் நடைபெற இருக்கும் 122-வது மலர் கண்காட்சிக்காக, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி, வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சி நடை பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, பூங்காவில் பல்வேறு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட 90 வகையான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள், கண்காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகளின் மனதைக் கொள்ளையடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி, வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சி நடை பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, பூங்காவில் பல்வேறு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட 90 வகையான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள், கண்காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகளின் மனதைக் கொள்ளையடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
