100 மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவிலான சாதனையை முறியடித்த பஞ்சாப் வீரர்

கோவை: கோவையில் நடைபெற்று வரும் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீரர் இந்திய அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்று வரும் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீரர் இந்திய அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 



தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 100 முதல் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என 46 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நேற்று மழை பெய்ததன் காரணமாக தொடக்க நாளில் நடைபெறவிருந்த 100 மீ ஓட்டப் பந்தயம் இன்று நடைபெற்றது. இதில், பஞ்சாபைச் சேர்ந்த குரீந்தர்வீர் சிங் 10.47 வினாடிகளில் இலக்கைக் கடந்து தேசிய அளவிலான சாதனையைப் படைத்துள்ளார். மேலும், ஆசிய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஆண்ட நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீ ஓட்டப் பந்தயத்தில் ஆசியன் யூத் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...