கோவை : கோடை சீசனையொட்டி மே மாதம் 1 மற்றும் ஜூன் மாதம் 15 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 4 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவை : கோடை சீசனையொட்டி மே மாதம் 1 மற்றும் ஜூன் மாதம் 15 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 4 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
முழுக்க, முழுக்க முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயில்களில் இரண்டு, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டிகள் இணைந்தவாறு இருக்கும். மேலும், ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் தனியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இருநாட்களிலும் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக மதியம் 12.30 மணிக்கு குன்னூர் வந்தடையும். மறுமார்க்கத்தில், இருநாட்களிலும் ரயில் குன்னூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு ஹில்குரோவ், கல்லார் வழியாக மாலை 04.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
முழுக்க, முழுக்க முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயில்களில் இரண்டு, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டிகள் இணைந்தவாறு இருக்கும். மேலும், ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் தனியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இருநாட்களிலும் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக மதியம் 12.30 மணிக்கு குன்னூர் வந்தடையும். மறுமார்க்கத்தில், இருநாட்களிலும் ரயில் குன்னூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு ஹில்குரோவ், கல்லார் வழியாக மாலை 04.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.