வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு : ரயில்மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

அண்மையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைக் கண்டித்து பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்தடைந்த பயணிகள் ரயிலில் வந்த தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தின். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-ல் திருத்தம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். மேலும், ரயில் எஞ்சின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...