திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.
திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, பள்ளி வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து 140 பள்ளிகளைச் சேர்ந்த 661 பேருந்துகள் சோதனைக்காக வந்திருந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி ஆகியவை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பள்ளி வாகனங்களைக் கவனமாக இயக்கவும், ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர். மேலும், காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வினை பார்வையிட வருவதாக சொல்லியிருந்த நிலையில், 11 மணிக்கு மேல் ஆட்சியர் வந்ததால் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் வெயிலில் அதிக நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, பள்ளி வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து 140 பள்ளிகளைச் சேர்ந்த 661 பேருந்துகள் சோதனைக்காக வந்திருந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி ஆகியவை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பள்ளி வாகனங்களைக் கவனமாக இயக்கவும், ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர். மேலும், காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வினை பார்வையிட வருவதாக சொல்லியிருந்த நிலையில், 11 மணிக்கு மேல் ஆட்சியர் வந்ததால் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் வெயிலில் அதிக நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.