தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, பள்ளி வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து 140 பள்ளிகளைச் சேர்ந்த 661 பேருந்துகள் சோதனைக்காக வந்திருந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி ஆகியவை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. 



இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பள்ளி வாகனங்களைக் கவனமாக இயக்கவும், ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர். மேலும், காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வினை பார்வையிட வருவதாக சொல்லியிருந்த நிலையில், 11 மணிக்கு மேல் ஆட்சியர் வந்ததால் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் வெயிலில் அதிக நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...