பிராணிகளின் கண்ணீர் துடைக்க தண்ணீர் தொட்டி..! சிறு வயதில் பெரிய மனம் படைத்த சிறுவர்கள்

கோவை : கோவை குறிச்சி நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் நாய், பறவை, ஆடு, கோழி போன்று சாலையில் சுற்றும் பிராணிகளுக்கு கோடை வெயிலின் தாகம் தீர்க்க சிறுவர்கள் சிறு சிறு தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர்.

கோவை : கோவை குறிச்சி நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் நாய், பறவை, ஆடு, கோழி போன்று சாலையில் சுற்றும் பிராணிகளுக்கு கோடை வெயிலின் தாகம் தீர்க்க சிறுவர்கள் சிறு சிறு தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர்.



கோடை காலம் ஆரம்பித்து சில நாட்களிலே ஆன நிலையில், வெயிலின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனிடையே, கோவையில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் சாலையில் சுற்றும் பிராணிகள் தாகம் தீர்க்க தண்ணீருக்காக சுற்றுவதைப் பார்த்த சிறுவர்கள், தங்களின் முயற்சியால் 1 முதல் 2 அடி வரை குழி பறித்து அதன் மீது பிளாஸ்டிக் பையை விரித்து தண்ணீர் உற்றி வைத்தனர்.



இந்நிலையில், தண்ணீர் தேடி அலைந்த பிராணிகள், அதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. இதனால், அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...