சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதான பெண் யானை ராஜேஸ்வரி, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறது. உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில், யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்தும் அது பயன்தரவில்லை. மேலும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே சென்றது.
எனவே, யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் யானையைத் தீவிரமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை திடீரென ராஜேஸ்வரி யானை தானாகவே உயிரிழந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதான பெண் யானை ராஜேஸ்வரி, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறது. உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில், யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்தும் அது பயன்தரவில்லை. மேலும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே சென்றது.
எனவே, யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் யானையைத் தீவிரமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை திடீரென ராஜேஸ்வரி யானை தானாகவே உயிரிழந்தது.