கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.
கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

ஆளுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த பா.ஜ.க.,வின் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.வி. சேகருக்கு, பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எஸ்.வி. சேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் காத்திருப்புப் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர், எஸ்.வி. சேகர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆணையரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள், உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது பேசிய ஆணையர், "பத்திரிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

ஆளுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த பா.ஜ.க.,வின் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.வி. சேகருக்கு, பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எஸ்.வி. சேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் காத்திருப்புப் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர், எஸ்.வி. சேகர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆணையரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள், உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது பேசிய ஆணையர், "பத்திரிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.