எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. 



ஆளுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த பா.ஜ.க.,வின் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.வி. சேகருக்கு, பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எஸ்.வி. சேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 



இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் காத்திருப்புப் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 



பின்னர், எஸ்.வி. சேகர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆணையரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள், உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அப்போது பேசிய ஆணையர், "பத்திரிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...