தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். 



குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புணரமைக்கப்பட்ட காவல்நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த புதிய காவல்நிலையம் 34-வது காவல் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். மாவட்டத்தில் ஏற்கனவே, 33 காவல்நிலையங்கள் மற்றும் 3 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. 

தடாகம், சின்ன தடாகம், வீரபாண்டி, பன்னிமடை ஆகிய நான்கு கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பட்டிற்குள் வருகின்றன. இரண்டு உதவி ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் 9 பேர் மற்றும் காவலர்கள் 2 பேருடன் இந்த காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் திறக்கப்பட வேண்டிய இந்த காவல்நிலையம், தடாகம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாலை 3.30 மணியளவில் திறக்கப்பட்டது. 

"மலைவாழ் மற்றும் கிராமமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் போது துடியலூர் காவல்நிலையத்தை நாடிச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, இந்த காவல்நிலையம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்" என்று போலீசார் தெரிவித்தனர். 

புதிய காவல்நிலையம் திறப்பு விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...