பல்லுயிர் பெருக்கத்திற்காக வனக்குட்டையில் 2,000 மீன்களை விட்ட வனத்துறை

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட குட்டையில் பல்லுயிர் பெருக்கத்திற்காகவும், பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாகவும் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட குட்டையில் பல்லுயிர் பெருக்கத்திற்காகவும், பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாகவும் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. 



கோவை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் கடுமையான தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் உழியூர் என்ற இடத்தில் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் செயற்கை குட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குட்டைக்கு அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் வரை செயற்கையாக குழாய்கள் அமைத்து, தண்ணீர் கொண்டு வரப்பட்டு குட்டையில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், மழைக் காலங்களில் இதில் தண்ணீர் நிரம்பினால் ஒரு வருடம் வரை வனவிலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. அத்துடன் தொடர்ந்து செயற்கையாகவும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால் இந்தக் குட்டைகளில் பறவைகளும் அதிக அளவில் தண்ணீர் தேடி வரத்தொடங்கியுள்ளன.



எனவே, இங்கு வரும் பறவைகளுக்கு தொடர்ந்து உணவு அளிக்கும் வகையிலும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் உழியூர் வனக்குட்டையில் சுமார் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதனால், குட்டைக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முயற்சி மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...