திருப்பூரில் ஆசைவார்த்தைக்கு அடிபணிந்த செல்போன் திருடர்கள்

திருப்பூர் : திருப்பூரில் மிளகாய் பொடி தூவியும் கத்திமுனையில் செல்போன் திருடிய திருடனை, பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் உதவியுடன், ஆசைவார்த்தை காட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் மிளகாய் பொடி தூவியும் கத்திமுனையில் செல்போன் திருடிய திருடனை, பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் உதவியுடன், ஆசைவார்த்தை காட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் ஊற்றுக்குளி சாலை இரண்டாம் இரயில்வே கேட் பகுதில் வேலை செய்துவருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு இரவு வீடு திருப்பும் போது, கமலக்கண்ணனின் இருசக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் மின்மாயனம் முன்பு நின்றுள்ளது.

அதைத் தொடர்ந்து உடன் வந்த கமலக்கண்ணனின் நண்பன் வாகனத்தை படுக்கவைத்து அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு செல்வதையும் கமலக்கண்ணன் தனியாக வருவதைக் கண்ட ஜீவகனேசன் மற்றும் விக்னேஷ் இருவரும் இருசக்கர வகந்த்தில் வந்து, கமலக்கண்ணன் மீது மிளகாய்த்தூளை தூவிவிட்டு செல்போனை பிடுங்கியுள்ளனர்.

அப்போது கமலக்கண்ணன், திருடனின் சட்டையை பிடித்த போது ஜீவகனேசன் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கமலக்கண்ணன் தனது நண்பர்கள் உதவியுடன், நல்லூர் பகுதியில் கமலக்கண்ணனுக்கு தரவேண்டிய பணம் ரூ.15,000/- பஸ்டாப் அருகில் உள்ள பெட்டிக்கடையில் தந்துள்ளேன் என்றும் வந்து வங்கிக்கொள்ளவும் என சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளனர்.



சிறிது நேரம் கழித்து ஜீவகனேசன், அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு அருகில் சுற்றிவந்துள்ளான். மேலும், அந்த பெட்டிக்கடைக்கு சென்று பணத்தை கேட்டபோது அருகில் இருந்த கமலக்கண்ணனின் நண்பரான விஷ்ணு அவனை பிடித்துள்ளார். அதனை கண்ட மற்ற நண்பர்களும் வந்து சூழ்ந்துகொண்டு அவனைபிடித்து அருகில் உள்ள ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நண்பர்கள் குழுவாக சேர்ந்து திருடனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த  சம்பவம் திருப்பூர் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...