அ.தி.மு.க பொதுச்செயலாளரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய ஓ.பி.எஸ்., தரப்பு தயக்கம் : கே.சி. பழனிச்சாமி

கோவை : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தயக்கம் காட்டி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தயக்கம் காட்டி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- அ.தி.மு.க.,வில் தற்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் செல்லாது என்ற தீர்ப்பு மே முதல் வாரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் வரவாய்ப்பு இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் பொதுச் செயலாளர் பதவியினை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என தினகரன் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து ஓ.பி.எஸ். தரப்பினர் பின்வாங்குகின்றனர். 

பொதுச் செயலாளர் பற்றிய எந்த முடிவையும் பொதுக்குழு எடுக்க முடியாது. அ.தி.மு.க., சட்ட விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். இன்னொரு கட்சி தலைவர் சொல்லுவதை கேட்டு நடப்பவர்கள் அ.தி.மு.க., கட்சிக்கு தலைமை தாங்க முடியாது. ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் பதவிகள் கிடைத்தால் போதும் என்று செயல்படுகின்றனர். 

அ.தி.மு.க.,வில் இருந்து ஏற்கனவே என்னை நீக்கியிருப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் சொல்கிறார். நீக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் கட்சி பணிகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். நிதானம் இழந்து பேசக்கூடியவர் சி.வி.சண்முகம். அ.தி.மு.க.,வை மோடி முன்னேற்றக் கழகமாக மாற்ற ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய ஆட்சியில் ஸ்டாலின் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சரை போல செயல் படுகிறார். பா.ஜ.க.,வின் கிளை போன்று அ.தி.மு.க., செயல்படுகின்றது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டோ, தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டோ நடத்த வேண்டும். இதற்கான உத்தரவுகள் நீதிமன்றம் மூலம் வரலாம், எனக் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...