கொளுத்தும் வெயிலில் அரசு பள்ளி சேர்க்கைக்காக அலைக்கழிக்கப்படும் பிஞ்சு குழந்தைகள்

திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது.

திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது. 

பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைகள் தனியார் பள்ளிகளில் துவங்கிவிட்டன. அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள், கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி திருப்பூர் கஞ்சம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியின் சார்பில் பள்ளியில் பயிலும் சின்ன குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

கொளுத்தும் வெயிலில் அரசுப் பள்ளி சேர்க்கைக்காக இளம் சிறார்களை இதுபோன்று அலைக்கழித்த சம்பவம் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வரும் சீரிய செயல்கள், இதுபோன்ற நிகழ்வுகளால் விமர்சனத்திற்குள்ளாகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...