திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது.
திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது.
பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைகள் தனியார் பள்ளிகளில் துவங்கிவிட்டன. அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள், கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி திருப்பூர் கஞ்சம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியின் சார்பில் பள்ளியில் பயிலும் சின்ன குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கொளுத்தும் வெயிலில் அரசுப் பள்ளி சேர்க்கைக்காக இளம் சிறார்களை இதுபோன்று அலைக்கழித்த சம்பவம் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வரும் சீரிய செயல்கள், இதுபோன்ற நிகழ்வுகளால் விமர்சனத்திற்குள்ளாகிறது.
பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைகள் தனியார் பள்ளிகளில் துவங்கிவிட்டன. அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள், கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி திருப்பூர் கஞ்சம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியின் சார்பில் பள்ளியில் பயிலும் சின்ன குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கொளுத்தும் வெயிலில் அரசுப் பள்ளி சேர்க்கைக்காக இளம் சிறார்களை இதுபோன்று அலைக்கழித்த சம்பவம் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வரும் சீரிய செயல்கள், இதுபோன்ற நிகழ்வுகளால் விமர்சனத்திற்குள்ளாகிறது.