நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.
நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

உதகையில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இங்குள்ள சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களைக் காண வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாக நடவடிக்கையின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள் கூறும்போது:- இதுபோன்ற கோடை சீசன் காலங்களில் மட்டுமே எங்களுக்கு வியாபாரமானது இருக்கும். பிற நாட்களில் எங்களது வியாபாரம் இருக்காது, என வேதனையுடன் தெரிவித்தனர்.