உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.


நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. 



உதகையில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இங்குள்ள சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களைக் காண வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாக நடவடிக்கையின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டனர். 



இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள் கூறும்போது:- இதுபோன்ற கோடை சீசன் காலங்களில் மட்டுமே எங்களுக்கு வியாபாரமானது இருக்கும். பிற நாட்களில் எங்களது வியாபாரம் இருக்காது, என வேதனையுடன் தெரிவித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...