தமிழகத்தில் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை திறக்க நடவடிக்கை

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி நாளில் அரசியலில் பிரவேசித்த ரஜினி, முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.  மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்தக் கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 65,500 குக்கிராமங்களில் மன்றத்தின் கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணி தீவிரமாக நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 65,000 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்தப் பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...