பேராசிரியை நிர்மலா தேவிக்குயை 5 நாள் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவிக்குயை 5 நாள் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.
இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன. இந்த நிலையில், நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் 7 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.
இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன. இந்த நிலையில், நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் 7 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.