சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆந்திர அரசு, மத்திய அரசுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. தொடர்ந்து, அக்கட்சியின் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பா.ஜ.க அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்தத் தீர்மானத்துக்கு, தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திரக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, ஆந்திராவின் பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு, பல்வேறு கட்சியினரும் ஆதரவளித்திருந்தனர். ஆனால், சந்திரபாபு நாயுடு, முழு அடைப்பினால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிப்படையும் எனக் கூறி போராட்டத்தைப் புறக்கணித்தார். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை விஜயவாடாவில் அவரது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இன்று, சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...