கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

பவுண்டரி தொழிலின் மூலப்பொருட்களான நிலக்கரி, தேனிரும்பு, இரும்புகள் ஆகியவற்றின் விலை உயர்வால் சிறுகுறு வார்ப்பட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோவை சேரன் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வீதம் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மூலப்பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வார்ப்பட ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.