வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அக்காமலை எஸ்டேட்டில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர், முடக்கு வளைவு பாலத்தின் அருகே நிலைதடுமாறி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த மாடசாமி (38), பக்கிராம் (32), திருமுருகன் (35), விஜயகுமார் (28), தினேஷ்குமார் (32), ராகுல் (28), காளிமுத்து (30) மற்றும் ஓட்டுநர் காளிமுத்து ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள கருமலை எஸ்டேட் தோட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தோட்ட அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.