கோவையில் விடிய விடிய ரெய்டு: ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவையில் நடத்திய ரெய்டில் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவையில் நடத்திய ரெய்டில் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாமஸ் வீதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது, ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பி. விஜய லலிதாம்பிகை கூறுகையில், "கோவையை பொறுத்தவரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.



கடந்த வாரம் கோவையில் நெய் தயாரிக்கும் நிறுவனங்களில் தர ஆய்வு நடத்தினோம். பின்னர், கோடைகாலத்தை முன்னிட்டு பழச்சாறு தயாரிக்கும் கடைகளில் தரமான பழச்சாறு தயாரிப்பதை உறுதி செய்யும் விதமாக ரெய்டு நடத்தினோம். காந்திபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் நேற்று முன்தினம் இந்த ஆய்வு நடைபெற்றது. 

இந்த சூழலில், நேற்று இரவு தாமஸ் வீதியில் உள்ள குடோனில் நடத்திய ஆய்வில் ரூ. 3.69 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாநகரின் பல்வேறு பெட்டிக் கடைகளில் விற்பனையாவதும், இதைத் தடுக்க பொதுமக்கள் அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...