கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஐடிசி வெல்கம்ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வளர்ச்சிக்காக வர்த்தகத் துறையில் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தொழில்முனைவர்கள் அவர்களின் வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தொலைத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் உள்ள வாய்ப்புகளும் தொழில்முனைவோர்களுக்கு எடுத்துக் கூறப்படும்.
இது தொடர்பாக பி.என்.ஐ. குல்டிவேட்டின் உறுப்பினர் சிந்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி தொலை தொடர்பு துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும், வர்த்தக துறையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்," என்றார்.
காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், தொடர்புக்கு 9894499501.
ஐடிசி வெல்கம்ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வளர்ச்சிக்காக வர்த்தகத் துறையில் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தொழில்முனைவர்கள் அவர்களின் வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தொலைத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் உள்ள வாய்ப்புகளும் தொழில்முனைவோர்களுக்கு எடுத்துக் கூறப்படும்.
இது தொடர்பாக பி.என்.ஐ. குல்டிவேட்டின் உறுப்பினர் சிந்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி தொலை தொடர்பு துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும், வர்த்தக துறையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்," என்றார்.
காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், தொடர்புக்கு 9894499501.