பெண்களே...! : கோடையில் லெகின்ஸ் அணிய வேண்டாம்

கோவை : ஆடை அலங்காரம் என்பது நம் உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்று. கலர் கலராய் ஆடைகள் வாங்குவதில் பெண்களே என்றும் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆடைகள் நம் கால நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

கோவை : ஆடை அலங்காரம் என்பது நம் உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்று. கலர் கலராய் ஆடைகள் வாங்குவதில் பெண்களே என்றும் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆடைகள் நம் கால நிலைக்கு ஏற்ப மாறுபடும். பெண்களுக்கென பல்வேறு விதமான ஆடைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால், இந்த ஆடைகள் எல்லாம் வெயில் காலத்திற்கு உகந்ததா?



இந்த கேள்விக்கு விடை காண்பதை நாம் மறந்து விடுகிறோம். இந்த கோடைக்காலத்தில் லெகின்ஸ் உடை உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

லெகின்ஸ் உடலில் உள்ள ஈரப்பதங்களை உறிஞ்சி, வறண்டு போகும். அதனோடு, வேர்வை வெளியேறும் போது இதன் காரணமாக சிறு தடிப்புகள் உடலில் தோன்ற வாய்ப்புள்ளதாகத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 



இது குறித்து பிரியங்கா என்ற இல்லத்தரசி கூறுகையில், "நான் லெகின்ஸ் அணிவேன். எனது கால்களில் சிறு தடிப்புகள் ஏற்பட்டிருந்தன. வேறு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் அணுகிய போது, லெகின்ஸ் அணிய வேண்டாம் என்று அறிவுரை கூறினார்." என்றார்.

இது குறித்து தோல் நோய் சிகிச்சை நிபுணர், மருத்துவர் மன்வீன் கபூர் கூறுகையில், "லெகின்ஸ் அணிவது சுலபம். ஆனால், அது ஏற்படுத்தும் பிச்சினைகள் அதிகம். குறிப்பாக கோடை காலத்தில் லெகின்ஸ் அணிவதை தவிர்த்திடுங்கள். இது வேர்வை வெளியேறுவதைத் தடுக்க வல்லது. மிகவும் இறுக்கமான ஆடையாக இருக்கும் லெகின்ஸ் நம் உடலுக்குள் காற்று செல்லவதைத் தடுக்கிறது. கோடைக் காலத்தில் தளர்வான ஆடைகளே சிறந்தது." என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...