விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த வரும் என் தமிழினம்: ஹர்பஜனின் கலக்கல் டுவிட்

நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும், திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியை காண  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் 1,000 பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில், சென்னை அணியின் ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர்.

இதனிடையே, போட்டியைக் காண பலநூறு மடங்கு மைல்கள் தாண்டி வரும் ரசிகர்களை, சென்னை அணியின் வீரர் ஹர்பஜன்சிங் வழக்கம் போல தமிழில் டுவிட் செய்து வரவேற்றுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்..!. உங்கள் அன்புக்கு நானடிமை..!. நீங்க வேற லெவல் மாஸ் யா... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...