நீதிபதி லோயா மரணத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை - உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து இருந்தார். அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த போலி என்கவுண்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வந்த அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதி லோயா மரண வழக்கு நீதித்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வணிக மற்றும் அரசியல் நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது." எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...