டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து இருந்தார். அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த போலி என்கவுண்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வந்த அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதி லோயா மரண வழக்கு நீதித்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வணிக மற்றும் அரசியல் நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது." எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து இருந்தார். அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த போலி என்கவுண்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வந்த அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதி லோயா மரண வழக்கு நீதித்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வணிக மற்றும் அரசியல் நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது." எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.