வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள டாடா-காபி நிறுவனத்திற்கு சொந்தமான உருளிக்கல் எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வால்பாறை தாலுகா அளவில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெறுபவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1.5 ½ லட்சம் மதிப்புள்ள கால்பந்து, காலணி, மற்றும் விளையாட்டு சீருடைகள், கைப்பந்து, கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கும் விடுதிக்கு 1000 லிட்டர் சோலார் வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், படுக்கும் மெத்தைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் வழங்கினார்.

இதுகுறித்து டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில் “பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் மிகுந்த சிரமத்தில் பணியாற்றி உங்களைப் படிக்க வைக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள டாடா-காபி நிறுவனத்திற்கு சொந்தமான உருளிக்கல் எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வால்பாறை தாலுகா அளவில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெறுபவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1.5 ½ லட்சம் மதிப்புள்ள கால்பந்து, காலணி, மற்றும் விளையாட்டு சீருடைகள், கைப்பந்து, கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கும் விடுதிக்கு 1000 லிட்டர் சோலார் வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், படுக்கும் மெத்தைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் வழங்கினார்.

இதுகுறித்து டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில் “பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் மிகுந்த சிரமத்தில் பணியாற்றி உங்களைப் படிக்க வைக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.
